» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து: 8 பேர் உயிரிழப்பு!
வியாழன் 9, மே 2024 3:35:57 PM (IST)
சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் சுதர்சன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 7 அறைகள் தரைமட்டமாகின. இந்த விபத்தில் உயிரிழந்த 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை 10 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் வந்துபோராடி விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகிறார்கள். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.