» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கல்லாற்றில் மூழ்கி கல்லுாரி மாணவர் பலி

வியாழன் 25, ஏப்ரல் 2024 4:41:12 PM (IST)

அத்திரிமலை கல்லாற்றில் மூழ்கி தூத்துக்குடியைச் சேர்ந்த கல்லுாரி மாணவர் பரிதாபமாக இறந்தார். 

துாத்துக்குடி தெய்வசெயல்புரத்தை சேர்ந்தவர் திருப்பதி மகன் முத்துகுமார் (18). இவர் பாளையில் உள்ள கல்லூரியில் பி.ஏ., முதலாமாண்டு படித்து வந்தார். தனியார் பயிற்சி மையத்திலும் பயிற்சி பெற்று வந்தார். தனியார் பயிற்சி மையத்தின் நிர்வாகி பொறுப்பில் 15 மாணவர்கள் ஆழ்வார்குறிச்சி அருகே கடனா அணை பகுதியில் உள்ள கோரக்கநாதர் கோயிலில் நடந்த சித்ரா பவுர்ணமி விழாவில் கலந்து கொண்டனர். 

திரும்பி வரும் வழியில் கல்லாற்றில் நண்பர்களுடன் சேர்ந்து முத்துக்குமார் குளித்தார். திடீரென முத்துகுமார் காணாமல் போனார். நண்பர்கள் தேடி பார்த்த போது இவர் தண்ணீரில் மூழ்கி இறந்து போனது தெரிந்தது. புகாரின் படி, கடையம் இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory