» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது: வணிகா் சங்கங்களின் பேரமைப்பு

சனி 4, மே 2024 3:35:25 PM (IST)

தமிழ்நாடு முழுவதும் நாளை (மே 5) கடைகள் இயங்காது என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.

மதுரையில் நாளை மே 5இல் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 41 ஆவது வணிகர் விடுதலை முழக்க மாநில மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதில் இருந்தும் லட்சக்கணக்கான வணிகர்கள் மதுரை மாநாட்டில் ஒன்றுகூட உள்ளதால் நாளை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டையொட்டி கடைகள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், உணவகங்கள், மால்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் 5 தீா்மானங்கள் பிரகடன தீா்மானமாக கொண்டு வரப்பட உள்ளன. அந்த தீா்மானங்களை அரசு பரிசீலிக்க வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்த உள்ளதாக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory