» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

போலீஸ் தாக்கியதில் டாக்சி டிரைவர் மரணம்: தலைமை காவலர் கைது!!

சனி 23, மார்ச் 2024 5:30:58 PM (IST)

மதுரவாயல் அருகே போலீஸ் தாக்கியதில் டாக்சி டிரைவர் உயிரிழந்த விவகாரத்தில் தலைமை காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மதுரவாயல் அருகே போலீசார் தாக்கியதில் கார் டிரைவர் உயிரிழந்த விவகாரத்தில் தலைமை காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு, கால் டாக்சி டிரைவரான ராஜ்குமார் வானகரம் சர்வீஸ் சாலையில், பெண் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். இது தொடர்பாக அவரை மதுரவாயல் காவல் நிலைய தலைமை காவலர் ரிஸ்வான் விசாரித்துள்ளார். 

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் டிரைவர் ராஜ்குமாரை தலைமை காவலர் ரிஸ்வான் தாக்கியதாக கூறப்படுகிறது. டிரைவர் ராஜ்குமார் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக காவல் உயர் அதிகாரிகள் துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டனர். அதில், காவலர் ரிஸ்வான் தாக்கியதில் டிரைவர் ராஜ்குமார் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமை காவலர் ரிஸ்வான் கைது செய்யப்பட்டுள்ளார்.


மக்கள் கருத்து

m.sundaramMar 25, 2024 - 11:53:35 AM | Posted IP 162.1*****

When it is confirmed he should be immediately removed from service after giving notice

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory