» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குளச்சலில் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்!

வெள்ளி 22, மார்ச் 2024 3:29:17 PM (IST)

தூத்துக்குடி மீனவர்கள் சிறைபிடித்த படகுகளையும் மீனவர்களையும் விடுவிக்க கோரி குளச்சலில் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000 க்கும் மேற்பட்ட பைபர் வள்ளம் கட்டுமரங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. கடந்த வாரம் விசைப்படகுகள் குளச்சல் மீன் பிடித்துறைமுகத்திலிருந்து வழக்கம்போல் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றன. 

கடந்த 19 ம் தேதி தூத்துக்குடி கடல் பகுதியில் மீன் பிடித்ததாக குளச்சல் 5 விசைப்படகுகளில் இருந்த 73 மீனவர்களையும் மற்றும் ஒரு கேரள விசைப்படகையும், அதிலிருந்த 13 மீனவர்களையும் தூத்துக்குடி மீனவர்கள் சிறைப்பிடித்து தூத்துக்குடி மீன் பிடித்துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். தகவலறிந்த குமரி மாவட்ட விசைப்படகு மீன் பிடிப்பவர் நலச்சங்கம்

(குளச்சல்)நிர்வாகிகள் விரைந்து தூத்துக்குடி சென்றனர். அங்கு மீன் வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தூத்துக்குடி மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக முடிவு  ஏற்படவில்லை. தொடர்ந்து 3 நாட்கள் பேச்சு வார்த்தை நடத்தியும் முடிவு ஏற்படவில்லை. இதனை கண்டித்து இன்று குளச்சல் விசைப்படகினர் மற்றும் பைபர் வள்ளம், கட்டுமர மீனவர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர். வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ள குளச்சல் மீனவர்கள் தொடர்ந்து துறைமுகத்தில் தர்ணா நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory