» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விளவங்கோடு சட்டப்பேரவை அதிமுக வேட்பாளர் ராணி: இபிஎஸ் அறிவிப்பு!

வியாழன் 21, மார்ச் 2024 12:36:06 PM (IST)



விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ராணி போட்டியிடுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த விஜயதாரணி, காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததால் பதவியை ராஜிநாமா செய்தார்.இதனைத் தொடர்ந்து, மக்களவைத் தேர்தலுடன் விளவங்கோடு சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது. வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், அதிமுக சார்பில் அக்கட்சியின் மாநில மகளிர் அணிச் செயலாளர் ராணி போட்டியிடுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொ


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory