» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
போக்குவரத்து கழக ஊழியர் கொலை : பாதிரியார் உட்பட 3பேர் மீது குண்டாஸ்!
திங்கள் 18, மார்ச் 2024 10:16:45 AM (IST)
குமரி மாவட்ட போக்குவரத்து கழக ஊழியர் கொலை வழக்கில் கைதான பாதிரியார் உட்பட 3பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு மிக்கேல் அதிதூதர் கிறித்தவ தேவாலய பங்கு தந்தை அலுவலகத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர் சேவியர்குமார் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் இருந்த தக்கலை ஒன்றிய திமுக செயலாளர் ரமேஷ் பாபு, பாதிரியார் ராபின்சன், ஜஸ்டிஸ் ரோக் ஆகிய 3 பேர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.