» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சிறையில் சமையலர் பணியிடம்: மார்ச் 25 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!
செவ்வாய் 12, மார்ச் 2024 8:26:07 PM (IST)
நாங்குநேரி தனிக் கிளைச் சிறையில் காலியாக உள்ள சமையலர் பணியாளர் பணியிடத்திற்கு மார்ச் 25 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது தொடர்பாக பாளையங்கோட்டை மத்தியசிறை, சிறைக் கண்காணிப்பாளர் கோ.பா.செந்தாரைக்கண்ணன் வெளியிட்ட அறிக்கையில், "திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மத்தியசிறை கட்டுப்பாட்டிலுள்ள நாங்குநேரி தனிக் கிளைச் சிறையில் காலியாக உள்ள சமையலர் பணியாளர் பணியிடத்திற்கு வயது வரம்பு General Turn / Non-Priority -1 Post --18 Years-32 Years/OC, 18 Years -34 Years/BC & MBC, 18 Years -37 Years/SC & ST. கல்வி தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி, 2 வருடத்திற்கு குறையாமல் சமையலர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டிய விண்ணப்பம், சாதிச் சான்று நகல், ஆதார் அட்டை நகல், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பின் அதன் விவரம் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்.25.03.2024. விண்ணப்பிக்க வேண்டிய முகவரி கண்காணிப்பாளர் அலுவலகம், மத்தியசிறை, பாளையங்கோட்டை -627 002. மேற்கண்ட தகுதிகள் கொண்ட நபர்கள் (ஆண்) உரிய விவரங்களுடன் விண்ணப்பிக்குமாறு தெரிவித்துள்ளார்.