» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இளையராஜாவுடன் கனிமொழி எம்பி சந்திப்பு : பவதாரிணி மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார்!
வியாழன் 15, பிப்ரவரி 2024 11:11:27 AM (IST)
பவதாரிணி மறைவை முன்னிட்டு இளையராஜாவை நேரில் சந்தித்து கனிமொழி கருணாநிதி எம்பி ஆறுதல் தெரிவித்தார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி சமீபத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த நிலையில், நேற்று மாலை திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி சென்னை தியாகராஜா நகர் உள்ள இல்லத்தில் நேரில் சென்று பிரபல இசையமைப்பாளரும், எம்.பியுமான இளையராஜா மற்றும் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவிற்கு ஆறுதல் தெரிவித்தார்.