» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மார்த்தாண்டம் மேம்பால சாலை சீரமைக்கும் பணி : ஆட்சியர் ஸ்ரீதர் ஆய்வு

சனி 10, பிப்ரவரி 2024 11:50:17 AM (IST)



மார்த்தாண்டம் மேம்பால சாலை சீரமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் மேம்பாலம் வழியாக செல்லும் சாலைகள் பழுதடைந்துள்ளதாகவும், அச்சாலைப் பகுதிகளை சீரமைத்திட பொதுமக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.

அதனடிப்படையில் உடனடி நடவடிக்கையாக கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ரூ.50 இலட்சம் மதிப்பில் மேம்பால பகுதி சாலை சீரமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இவ்வாய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory