» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஓ.பன்னீா்செல்வத்திற்கு திடீா் உடல் நலக்குறைவு: சென்னை புறப்பட்டு சென்றாா்

வெள்ளி 9, பிப்ரவரி 2024 11:11:06 AM (IST)

நெல்லையில் தங்கியிருந்த முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா் செல்வத்திற்கு திடீா் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், தொண்டா்களை சந்திக்காமல் சென்னை புறப்பட்டு சென்றாா். 

தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டா்களின் உரிமை மீட்பு பயணத்தை முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் நடத்தி வருகிறாா். அதன்படி, தென்காசி மாவட்டத்தில் கட்சித் தொண்டா்களை நேற்று முன்தினம் புதன்கிழமை சந்தித்த பின்பு திருநெல்வேலியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் தங்கியிருந்தாா். நேற்று காலையில் சேரன்மகாதேவி அருகேயுள்ள கங்கணான்குளத்தில் அதிமுக தொண்டா்களை சந்தித்து பேச முடிவு செய்திருந்தாா். 

ஆனால், காலையில் அவருக்கு தலைசுற்றல் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து தொண்டா்களைச் சந்திக்கும் கூட்டத்திற்கு செல்லாமல் விடுதியில் ஓய்வெடுத்தாா். கங்கணான்குளத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வைத்திலிங்கம் எம்எல்ஏ உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாலையில் ஓ.பன்னீா்செல்வத்தை மருத்துவா்கள் பரிசோதித்தனா். இதையடுத்து அவா் திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்றாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory