» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சமுதாயத்தைக் குறிப்பிட்டு நாளிதழில் அவதூறு செய்தி வெளியீடு: விஸ்வகர்ம பேரவையினர் கண்டனம்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 12:16:17 PM (IST)

நாளிதழ் ஒன்றில் குறிப்பிட்ட சமுதாயத்தின் பெயரைச் சுட்டிக்காட்டி அவதூறு செய்தி வெளியிட்டதாகக் கூறி, அந்நாளிதழ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தித் தூத்துக்குடி மாவட்ட விஸ்வகர்ம சமுதாய மகாஜன பேரவையினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட விஸ்வகர்ம சமுதாய மகாஜன பேரவையின் தலைவர் முருகேசன், செயலாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகையி்ட்டு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் அளித்த நகை தொடர்பான புகாரை செய்தியாக வெளியிட்ட பிரபல தமிழ் நாளிதழ், தனிநபர் மீதான குற்றச்சாட்டிற்கு ஒட்டுமொத்த ஆசாரி சமுதாயத்தின் பெயரைப் பயன்படுத்தி அவதூறாகச் செய்தி வெளியிட்டுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாள்தோறும் பல்வேறு குற்றச்சம்பவங்கள் குறித்து செய்திகள் வெளிவரும் சூழலில், குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு முகவரி மற்றும் தந்தை அடையாளம் இருந்தபோதிலும், எந்தவொரு செய்தியிலும் ஜாதியை அடையாளப்படுத்தி செய்தி வெளியிடுவது கிடையாது. ஆனால், வடமாநிலத்தைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு, ஒட்டுமொத்த ஆசாரி சமூகத்தையும் குறிவைத்து செய்தி வெளியிட்டிருப்பது பத்திரிகை தர்மத்திற்கும் மரபிற்கும் எதிரானது என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பத்திரிகை மரபை மீறி ஜாதி பெயரைச் சுட்டிக்காட்டிச் செய்தி வெளியிட்டதால் சமுதாய மக்கள் மனவேதனை அடைந்துள்ளதாகவும், எனவே சம்பந்தப்பட்ட நாளிதழ் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பேரவை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சின்னத்துரை அன் கோவில் ஆடிப்பெருக்கு சிறப்பு விற்பனை : மக்கள் கூட்டம் அலைமோதல்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 8:25:27 PM (IST)

எட்டயபுரம் அருகே 15 ஆண்டுகளாகக் குடிநீரின்றித் தவிக்கும் கிராம மக்கள்: அதிகாரிகள் அலட்சியம்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 5:41:01 PM (IST)

பாளை., சிறைக்குச் சென்ற கனிமொழி எம்.பி.! - மார்க்கண்டேயன் எம்எல்ஏவுடன் நேரில் சந்திப்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:49:01 PM (IST)

தூத்துக்குடியில் 6ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கோட்டாட்சியர் தகவல்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:37:38 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.1 கோடி பட்டாசு திருட்டு வழக்கு : த.வெ.க. வழக்கறிஞர் அணி நிர்வாகி உள்பட 6 பேர் கைது!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:17:39 PM (IST)

ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 464 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 3:15:01 PM (IST)







