» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பக்கிள் ஓடை அகலப்படுத்தும் பணியில் பாதுகாப்பு குறைபாடு : ஆட்சியரிடம் அ.தி.மு.க. முறையீடு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 11:48:51 AM (IST)
தூத்துக்குடியில் பக்கிள் ஓடை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் எந்தவித எச்சரிக்கை பலகையோ, தடுப்புகளோ வைக்கப்படாததால் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாகக் கூறி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. கழகத் துணைச் செயலாளரும், மாவட்டக் கூட்டுறவு ஒன்றிய இயக்குநருமான சந்தனம், மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள கோரிக்கை மனுவில் "தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 3-வது மைல் பகுதியில் இருந்து பக்கிள் ஓடையை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறுகலான இந்தப் பகுதியில் சுமார் 10 அடி ஆழத்திற்குப் பள்ளம் தோண்டப்பட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இருப்பினும், இங்குப் பாதுகாப்பு கருதி எந்தவித முன்னெச்சரிக்கை அறிவிப்பு பலகையோ அல்லது தடுப்புப் பேரிகாடுகளோ வைக்கப்படவில்லை. இந்தப் பாதையானது 24 மணி நேரமும் அதிகளவில் வாகனப் போக்குவரத்து நிகழும் முக்கியச் சாலையாகும். மேலும், அங்கு அமைக்கப்பட்டிருந்த தெருவிளக்குகளும் அகற்றப்பட்டுள்ளன. இதனால் இரவு நேரத்தில் அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர், ஆழமான குழியில் விழுந்து படுகாயமடைவதுடன் வாகனங்களும் சேதமடைகின்றன.
எனவே, மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாகச் சம்பவ இடத்தைக் கள ஆய்வு செய்து, உயிர் பலி போன்ற அசம்பாவிதங்கள் ஏதும் நிகழும் முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்கீள் ஓடைக் கால்வாய் ஓரத்தில் பாதுகாப்புப் பேரிகாடுகள் வைக்கவும், இரவு நேரத்தில் மின்விளக்குகள் எரியவும் ஆவன செய்ய வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சின்னத்துரை அன் கோவில் ஆடிப்பெருக்கு சிறப்பு விற்பனை : மக்கள் கூட்டம் அலைமோதல்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 8:25:27 PM (IST)

எட்டயபுரம் அருகே 15 ஆண்டுகளாகக் குடிநீரின்றித் தவிக்கும் கிராம மக்கள்: அதிகாரிகள் அலட்சியம்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 5:41:01 PM (IST)

பாளை., சிறைக்குச் சென்ற கனிமொழி எம்.பி.! - மார்க்கண்டேயன் எம்எல்ஏவுடன் நேரில் சந்திப்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:49:01 PM (IST)

தூத்துக்குடியில் 6ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கோட்டாட்சியர் தகவல்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:37:38 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.1 கோடி பட்டாசு திருட்டு வழக்கு : த.வெ.க. வழக்கறிஞர் அணி நிர்வாகி உள்பட 6 பேர் கைது!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:17:39 PM (IST)

ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 464 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 3:15:01 PM (IST)







