» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மேம்பாலத்தில் சாய்ந்த சோலார் மின் கம்பம்: போக்குவரத்து சீர்செய்த பக்தருக்குப் பாராட்டு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 11:23:29 AM (IST)

தூத்துக்குடியில், சூறாவளி காற்று காரணமாக மேம்பாலத்தில் உயர் சோலார் மின் கோபுர விளக்கு கம்பம் திடீரென முறிந்து விழுந்தது. அவ்வழியாக வந்த செவ்வாடைத் தொண்டர் ஒருவர், சாய்ந்து கிடந்த கம்பத்தை உடனடியாக அப்புறப்படுத்திப் போக்குவரத்தைச் சீர்செய்த சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது.
தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மீன்வளக் கல்லூரி எதிரே உள்ள மேம்பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த உயர் சோலார் மின்விளக்குக் கோபுரக் கம்பம், திடீரென வீசிய சூறாவளி காற்றினால் முறிந்து கீழே சாய்ந்தது.மின் கோபுர விளக்கு கம்பம் அற்று கீழே விழுந்தபோது, நல்வாய்ப்பாக அந்தப் பாதையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது விழாமல் தனியாக விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இருப்பினும், மின் கம்பம் நடுரோட்டில் விழுந்து கிடந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டு ஸ்தம்பித்தது. அந்தச் சமயத்தில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த 'செவ்வாடைத் தொண்டர்' சக்தி என். பாண்டி என்பவர், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து உடனடியாகச் செயல்பட்டார்.
சாய்ந்து கிடந்த சோலார் மின் கோபுர விளக்கைச் சிரமப்பட்டுத் தூக்கி, மேம்பாலத்தின் ஓரத்திற்கு எடுத்து வைத்தார். இதனால் தடைபட்டுக் கிடந்த போக்குவரத்து உடனடியாகச் சீரடைந்து வாகனங்கள் தடங்கலின்றிச் செல்லத் தொடங்கின.

ஆபத்தான சூழலில் துரிதமாகச் செயல்பட்டுப் போக்குவரத்தைச் சீரமைத்த சக்தி என். பாண்டியின் இந்தச் சேவையைப் பாராட்டி, அப்பகுதி வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவருக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சின்னத்துரை அன் கோவில் ஆடிப்பெருக்கு சிறப்பு விற்பனை : மக்கள் கூட்டம் அலைமோதல்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 8:25:27 PM (IST)

எட்டயபுரம் அருகே 15 ஆண்டுகளாகக் குடிநீரின்றித் தவிக்கும் கிராம மக்கள்: அதிகாரிகள் அலட்சியம்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 5:41:01 PM (IST)

பாளை., சிறைக்குச் சென்ற கனிமொழி எம்.பி.! - மார்க்கண்டேயன் எம்எல்ஏவுடன் நேரில் சந்திப்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:49:01 PM (IST)

தூத்துக்குடியில் 6ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கோட்டாட்சியர் தகவல்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:37:38 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.1 கோடி பட்டாசு திருட்டு வழக்கு : த.வெ.க. வழக்கறிஞர் அணி நிர்வாகி உள்பட 6 பேர் கைது!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:17:39 PM (IST)

ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 464 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 3:15:01 PM (IST)








P KamarajAug 3, 2026 - 08:11:50 PM | Posted IP 172.7*****