» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் மீது கார் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 11:14:59 AM (IST)
மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் நயினார்புரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் மந்திரமூர்த்தி (60). ஓட்டுநரான இவர், தனது இருசக்கர வாகனத்தில் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். புதூர் பாண்டியாபுரம் அருகே, நெடுஞ்சாலையில் தடுப்புச் சுவர் பிரிக்கப்பட்டு வழி அமைக்கப்பட்டிருந்த இடத்தில், மேற்கிலிருந்து கிழக்காகச் சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.
அப்போது, குறுக்குச்சாலையில் இருந்து தூத்துக்குடி நோக்கி அதிவேகமாக வந்த கார், எதிர்பாராத விதமாக மந்திரமூர்த்தியின் பைக் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மந்திரமூர்த்தி, பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த புதியம்புத்தூர் போலீசார், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய கே. வேலாயுதபுரம் மேலத் தெருவைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ஜஸ்டின் டேனியல் (48) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சின்னத்துரை அன் கோவில் ஆடிப்பெருக்கு சிறப்பு விற்பனை : மக்கள் கூட்டம் அலைமோதல்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 8:25:27 PM (IST)

எட்டயபுரம் அருகே 15 ஆண்டுகளாகக் குடிநீரின்றித் தவிக்கும் கிராம மக்கள்: அதிகாரிகள் அலட்சியம்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 5:41:01 PM (IST)

பாளை., சிறைக்குச் சென்ற கனிமொழி எம்.பி.! - மார்க்கண்டேயன் எம்எல்ஏவுடன் நேரில் சந்திப்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:49:01 PM (IST)

தூத்துக்குடியில் 6ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கோட்டாட்சியர் தகவல்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:37:38 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.1 கோடி பட்டாசு திருட்டு வழக்கு : த.வெ.க. வழக்கறிஞர் அணி நிர்வாகி உள்பட 6 பேர் கைது!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:17:39 PM (IST)

ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 464 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 3:15:01 PM (IST)








makkalAug 3, 2026 - 01:00:19 PM | Posted IP 104.2*****