» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்யக் கோரிக்கை : தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

வெள்ளி 24, ஜூலை 2026 12:10:56 PM (IST)

NeetArpattamtuty.jpg

நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்வு முறையை ரத்து செய்யக் கோரியும் புதுடெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி வஉசி கல்லூரி நுழைவாயில் முன்பாக இன்று காலை 10:15 மணி முதல் 10:30 மணி வரை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத் தலைவர் மாடசாமி தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு, நீட் தேர்வுக்கு எதிராகவும், மத்திய அரசைக் கண்டித்தும் தீவிர கோஷங்களை எழுப்பினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory