» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
வியாழன் 25, ஜூன் 2026 3:44:11 PM (IST)

கோவில்பட்டியில் சட்டவிரோதமாக விற்பனைக்காகக் கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்த வாலிபரை மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடராஜபுரம் பகுதியில் சட்டவிரோத போதைப்பொருட்கள் புழக்கம் மற்றும் விற்பனை நடப்பதாகக் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான போலீசார் இன்று நடராஜபுரம் பகுதியில் தீவிரக் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பையுடன் நின்றுகொண்டிருந்த ஒரு நபரைப் பிடித்துப் போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அவர், சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காகப் பையில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடமிருந்த 1 கிலோ கஞ்சாவைப் போலீசார் சம்பவ இடத்திலேயே பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் கோவில்பட்டி நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வம் (35) என்பது தெரியவந்தது. இது குறித்துக் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பயிர் காப்பீட்டுத் தொகையாக ரூ.37.22 கோடி விடுவிப்பு : விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியர் தகவல்!
வியாழன் 25, ஜூன் 2026 4:36:23 PM (IST)

போதைப்பொருள் இல்லாத சமுதாயம் உருவாக்குவோம்: நீதிபதி தலைமையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு!
வியாழன் 25, ஜூன் 2026 3:37:12 PM (IST)

கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 5 பேர் காயம்!
வியாழன் 25, ஜூன் 2026 12:50:57 PM (IST)

சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக ரூ.6 லட்சம் மோசடி : தவெக நிர்வாகி மீது பரபரப்பு புகார்!
வியாழன் 25, ஜூன் 2026 12:42:04 PM (IST)

சமூகநல அலுவலகத்தில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
வியாழன் 25, ஜூன் 2026 11:57:30 AM (IST)

தூத்துக்குடியில் நாளை அண்ணாமலை இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம்: கரு நாகராஜன் பங்கேற்பு!
வியாழன் 25, ஜூன் 2026 11:28:11 AM (IST)








