» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை: தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

செவ்வாய் 16, ஜூன் 2026 9:26:19 PM (IST)



கடந்த 2023-ஆம் ஆண்டு 8 வயதுடைய இரண்டு சிறுமிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்துத் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் இன்று (ஜூன் 16) தீர்ப்பு வழங்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த 2023-ஆம் ஆண்டு 8 வயதுடைய இரண்டு சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை மற்றும் தொந்தரவு அளிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இச்சம்பவம் குறித்து விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும், இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட விளாத்திகுளம் சிவஞானபுரம் பகுதியைச் சேர்ந்த குற்றாலம் மகன் முருகானந்தன் (46) என்பவரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் விரிவான குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கின் இறுதி விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் மற்றும் ஆவணங்களின் விசாரணை நிறைவடைந்த நிலையில், போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா இன்று இவ்வழக்கில் முக்கியத் தீர்ப்பை வழங்கினார்.

அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட முருகானந்தன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவரை குற்றவாளி என நீதிபதி உறுதி செய்தார். குற்றவாளி முருகானந்தனுக்கு 7 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூபாய் 15,000/- அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.

மேலும், இச்சம்பவத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட 8 வயதுடைய அந்த இரண்டு சிறுமிகளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்குத் தமிழக அரசின் நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 2 லட்சம் வீதம் மொத்தம் 4 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி பிரீத்தா தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, சிறை தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி முருகானந்தன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி மத்தியச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory