» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
செல்போன் பறித்த 3 பேர் கைது: 2 பைக்குகள் பறிமுதல்!
வியாழன் 11, ஜூன் 2026 8:01:34 PM (IST)

ப்போதும்வென்றான் அருகே இளஞ்சிறாரை மிரட்டி கைபேசியைப் பறித்துச் சென்ற வழக்கில், 3 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் காவல் எல்லைக்குட்பட்ட மேலச்செய்தலை கிராம விலக்குச் சாலையில், கடந்த மே மாதம் 17-ஆம் தேதி அன்று இரவு நேரத்தில் இளம்சிறார் ஒருவர் தனது செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இரண்டு இருசக்கர வாகனங்களில் 3 பேர் கொண்ட மர்மக் கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த இளம்சிறாரை மிரட்டி, அவரிடமிருந்த ரூபாய் பத்தாயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக்கொண்டு, தங்களது வாகனங்களில் வேகமாகத் தப்பிவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட எப்போதும்வென்றான் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தியதில் இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி தாளமுத்துநகர் சேசு நகர்ப் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார் மகன் தமிழரசன் (21), தூத்துக்குடி துரைசிங்நகர் 5-ஆவது தெருவைச் சேர்ந்த முருகன் மகன் இசக்கிமுத்து (19), கடம்பூர் அருகே உள்ள ஓனமா குளம் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் மகன் முத்துச்செல்வன் (19) ஆகிய 3பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து, திருடப்பட்ட செல்போன் மற்றும் 2 பைக்குள் பறிமுதல் செய்யப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புகார் கொடுக்க வந்த பெண்ணுக்குத் தொல்லை : போலீஸ் ஏட்டு அதிரடி பணி இடைநீக்கம்!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:55:01 AM (IST)

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.3 கோடி கசகசா பறிமுதல் : போலி ஆணவங்கள் மூலம் மோசடி!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:35:29 AM (IST)

உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகும் காங்கிரஸ் : தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:26:19 AM (IST)

சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுப் பிரச்சினைகளுக்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்: துரை வைகோ
ஞாயிறு 14, ஜூன் 2026 8:19:26 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட பிஆர்ஓ-வாக கருப்பண்ண ராஜவேல் நியமனம்!
சனி 13, ஜூன் 2026 9:55:14 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ.8.77 கோடி சமரசத் தொகை வழங்கல்!
சனி 13, ஜூன் 2026 9:33:23 PM (IST)









