» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஜமாபந்தியில் 59 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
வியாழன் 11, ஜூன் 2026 4:46:35 PM (IST)

ஏரல் வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் மொத்தம் 59 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்று வருவாய் தீர்வாய அலுவலர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த நிதியாண்டிற்கான 1435-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாய கணக்குகள் முடிவு செய்யும் பணி (ஜமாபந்தி) 02.06.2026 அன்று அனைத்து வட்டங்களிலும் சம்பந்தப்பட்ட வருவாய் தீர்வாய அலுவலர் தலைமையில் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவு நாளான இன்று (11.06.2026) நடைபெற்ற ஜமாபந்தியில் வருவாய் தீர்வாய அலுவலர் / மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், கலந்துக் கொண்டு, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இன்றையதினம் எரல் வட்டம், ஆழ்வார்திருநகரி உள்வட்டத்திற்குட்பட்ட மாவடிப்பண்ணை, குருகாட்டூர், மூக்குப்பீறி, கச்சனாவிளை ஆகிய கிராமங்களைச் சார்ந்த பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 29 மனுக்களை பெற்றுக்கொண்டு, அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்கள். மேலும், பெறப்பட்ட மனுக்களை ஆராய்ந்து அதன்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், இதுவரை மொத்தம் 542 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
மேலும், ஜமாபந்தியில் பட்டா வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு உடனடி தீர்வாக இன்றையதினம் 09 பயனாளிகளுக்கு என இதுவரை மொத்தம் 45 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களுக்கான ஆணைகளையும், மேலும், 05 பயனாளிகளுக்கு தனிப்பட்டாக்கான ஆணைகளையும், 01 பயனாளிக்கு முதல் பட்டதாரி சான்றினையும், 02 பயனாளிகளுக்கு வாரிசு சான்றிதழ்களையும், முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 01 பயனாளிக்கு திருமண உதவித்தொகையாக ரூ.8000/- க்கான ஆணையினையும் வருவாய் தீர்வாய அலுவலர் / மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், வழங்கினார்.
இந்நிகழ்வில் அலுவலக மேலாளர் (பொது) ரகு, ஏரல் வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் வருவாய் துறையின் அனைத்து நிலை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புகார் கொடுக்க வந்த பெண்ணுக்குத் தொல்லை : போலீஸ் ஏட்டு அதிரடி பணி இடைநீக்கம்!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:55:01 AM (IST)

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.3 கோடி கசகசா பறிமுதல் : போலி ஆணவங்கள் மூலம் மோசடி!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:35:29 AM (IST)

உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகும் காங்கிரஸ் : தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:26:19 AM (IST)

சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுப் பிரச்சினைகளுக்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்: துரை வைகோ
ஞாயிறு 14, ஜூன் 2026 8:19:26 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட பிஆர்ஓ-வாக கருப்பண்ண ராஜவேல் நியமனம்!
சனி 13, ஜூன் 2026 9:55:14 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ.8.77 கோடி சமரசத் தொகை வழங்கல்!
சனி 13, ஜூன் 2026 9:33:23 PM (IST)









