» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி

வியாழன் 11, ஜூன் 2026 10:24:06 AM (IST)

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், உப்பளத் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி கணேசபுரம், கீதா ஜீவன் நகரைச் சேர்ந்தவர் வேலு மகன் செல்வராஜ் (65). இவர் உப்பளத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். செல்வராஜ் கடந்த 7-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு உப்பளப் பணிக்குச் சென்றுவிட்டு, வேலை முடிந்ததும் தனது எக்ஸெல் இருசக்கர வாகனத்தில் மீண்டும் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலை மற்றும் ஜார்ஜ் சாலை சந்திக்கும் பகுதிக்கு அருகே வந்துகொண்டிருந்த போது, அவருக்கு எதிரே மிக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத மற்றொரு இருசக்கர வாகனம், செல்வராஜின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த செல்வராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ், நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிறுத்தாமல் சென்ற அந்த இருசக்கர வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory