» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஐஎன்டியூசி தேசிய செயல் தலைவர் கதிர்வேலை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் அமைச்சர் ஸ்ரீநாத்!

வியாழன் 11, ஜூன் 2026 8:05:19 AM (IST)



தூத்துக்குடியில் ஐஎன்டியூசி தேசிய செயல் தலைவரும், மூத்த அரசியல் பிரமுகருமான கதிர்வேலை, மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், தூத்துக்குடி மாவட்டத்திற்குப் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக வருகை தந்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடியில் உள்ள ஐஎன்டியூசி தேசிய செயல் தலைவர் கதிர்வேலின் இல்லத்திற்கு அமைச்சர் நேற்று நேரில் சென்றார். அங்கு, நாட்டின் மிக மூத்த தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான கதிர்வேலைச் சந்தித்து, அவரது உடல்நலம் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். 

தொடர்ந்து, அவரது நீண்ட கால அரசியல் மற்றும் பொதுவாழ்வின் அனுபவங்களைக் கேட்டறிந்த அமைச்சர், அவருக்குப் பொன்னாடை அணிவித்து மாரியாதை செய்ததுடன், அவரது வாழ்த்துகளையும் ஆசிகளையும் பெற்றுக் கொண்டார். இந்தச் சந்திப்பின் போது, கதிர்வேலின் மகனும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான பெருமாள்சாமி உடனிருந்தார். அமைச்சரின் இந்த வருகையைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள், ஐஎன்டியூசி தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் அரசியல் பிரதிநிதிகள் பலரும் அங்கு வருகை தந்து அமைச்சரை முறைப்படி வரவேற்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory