» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரூ. 75.25 லட்சம் மோசடி: கேரள ஆசாமி கைது!

புதன் 10, ஜூன் 2026 8:29:05 AM (IST)

தூத்துக்குடியில் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி, தனியார் நிறுவன ஊழியர் ஒருவரிடமிருந்து ரூ.75.25 லட்சம் பண மோசடி செய்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த நபரை சைபர் கிரைம் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவருக்கு, வாட்ஸ்ஆப் செயலி மூலம் விடியோ அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் மிகக் குறுகிய காலத்தில் லட்சக்கணக்கில் லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தைகளைக் கூறி வலைவீசியுள்ளார்.

இதனை உண்மை என்று நம்பிய அந்த ஊழியர், ஆரம்பத்தில் சோதனை முயற்சியாக அந்த நபர் கூறிய கணக்கிற்கு ரூ. 300 அனுப்பியுள்ளார். அதற்குப் பிரதிபலனாக, மறுநாளே அவரது கைப்பேசி கணக்கிற்கு ரூ. 500 திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அதிக லாபம் கிடைக்கும் என முழுமையாக நம்பிய அந்தத் தனியார் நிறுவன ஊழியர், ஆன்லைன் வர்த்தகத்தில் இன்னும் பெரிய அளவில் சம்பாதிக்கலாம் என்ற நோக்கில் 6 தவணைகளாக மொத்தம் ரூ. 75.25 லட்சத்தை அந்த நபரின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால், பெருந்தொகையை அனுப்பி ஒரு மாதமாகியும் முதலீடு செய்த பணத்திற்கான லாபமும் வரவில்லை; அசல் தொகை குறித்தும் எவ்வித தகவலும் இல்லை. தான் மோசடி கும்பலிடம் சிக்கி ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த ஊழியர், இது குறித்துத் தூத்துக்குடி சைபர் கிரைம் பிரிவில் முறைப்படி புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் நவீன தொழில்நுட்ப ரீதியாகத் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

போலீசார் நடத்திய விரிவான விசாரணையில், மோசடி செய்தது கேரள மாநிலம், திருச்சூர் பகுதியைச் சேர்ந்த முகமது என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கேரளாவிற்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார், திருச்சூரில் பதுங்கியிருந்த குற்றவாளி முகமதுவை திங்கள்கிழமை (ஜூன் 8) கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் குறித்துப் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory