» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தனியார் பள்ளி வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு!

புதன் 10, ஜூன் 2026 8:24:18 AM (IST)

கோவில்பட்டி அருகே பள்ளி வாகனம் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மகன் ராதாகிருஷ்ணன் (48), தொழிலாளி. இவர் தற்போது தூத்துக்குடி மாவட்டம் முடுக்குமீண்டான்பட்டி பகுதியில் தங்கி வசித்து வந்தார். நேற்று இவர் தனது இருசக்கர வாகனத்தில் கோவில்பட்டியிலிருந்து முடுக்குமீண்டான்பட்டிக்குச் சென்று கொண்டிருந்தார்.

மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சாலைப்புதூர் அருகே உள்ள அணுகு சாலையில் ராதாகிருஷ்ணன் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த ஒரு தனியார் பள்ளி வாகனம் எதிர்பாராதவிதமாக அவரது இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் தூக்கி வீசப்பட்ட ராதாகிருஷ்ணன், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

இவ்விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த ராதாகிருஷ்ணனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திய பள்ளி வாகனத்தின் ஓட்டுநரான முனியசாமி என்பவரைப் பிடித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory