» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஊதிய வழக்கு: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜூன் 16-ல் தீர்ப்பு!
செவ்வாய் 9, ஜூன் 2026 8:32:07 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பேட்டரி வண்டி ஓட்டுநர்களுக்குக் குறைந்தபட்சச் சம்பளம் வழங்கக் கோரி உழைப்போர் உரிமை இயக்கம் தாக்கல் செய்த வழக்கில் வரும் ஜூன் 16 அன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பேட்டரி வண்டி ஓட்டுநர்களுக்குக் குறைந்தபட்சச் சம்பளம் வழங்கக் கோரி உழைப்போர் உரிமை இயக்கம் தாக்கல் செய்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜூன் 16 அன்று தீர்ப்பு உத்தரவிற்காகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த முக்கிய வழக்கு இன்று (09.06.2026) சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மூன்றாவது நீதிமன்ற அறையில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது, தூய்மைப் பணியாளர்களுக்குக் குறைந்தபட்சச் சம்பளம் வழங்குவது தொடர்பான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இது தொடர்பாகச் சென்னை மாநகராட்சியில் நீதிபதி தண்டபாணி ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி சம்பளம் வழங்கப்பட்டு வரும் தகவலும், கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அதே உத்தரவையும், அரசாணை எண்: 62-ஐயும் குறிப்பிட்டுச் சம்பளம் நிர்ணயித்துள்ள விபரங்களும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டன. மேலும், இவ்வழக்கு கடந்த 06.04.2026 அன்று அட்மிஷன் கட்டத்தில் வந்த போதே நீதிமன்றம் உத்தரவிடத் தயாராக இருந்த நிலையும் நீதிபதியின் கவனத்திற்கு முறைப்படி கொண்டு செல்லப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, அடுத்த ஒருசில நாட்களில் வழக்கை மீண்டும் பட்டியலிடலாமா என்று கேட்டார். உழைப்போர் உரிமை இயக்கத் தரப்பில் உள்ள நடைமுறை வசதிகளைக் கருத்தில் கொண்டு, அடுத்த வாரத்தில் வழக்கை வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், வரும் 16.06.2026 அன்று "உத்தரவுக்காக என்ற தலைப்பில், தூத்துக்குடி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பேட்டரி வண்டி ஓட்டுநர்களுக்குக் குறைந்தபட்சச் சம்பளம் கோரும் இந்த வழக்கு இறுதி விசாரணைக்கு வரவுள்ளது.
இன்றைய வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் சகாயம், குமாரசாமி, ரமேஷ் மற்றும் வழக்கறிஞர் திருமுருகன் ஆகியோர் நேரில் ஆஜராகி இருந்தனர் என உழைப்போர் உரிமை இயக்கத் தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புகார் கொடுக்க வந்த பெண்ணுக்குத் தொல்லை : போலீஸ் ஏட்டு அதிரடி பணி இடைநீக்கம்!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:55:01 AM (IST)

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.3 கோடி கசகசா பறிமுதல் : போலி ஆணவங்கள் மூலம் மோசடி!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:35:29 AM (IST)

உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகும் காங்கிரஸ் : தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:26:19 AM (IST)

சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுப் பிரச்சினைகளுக்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்: துரை வைகோ
ஞாயிறு 14, ஜூன் 2026 8:19:26 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட பிஆர்ஓ-வாக கருப்பண்ண ராஜவேல் நியமனம்!
சனி 13, ஜூன் 2026 9:55:14 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ.8.77 கோடி சமரசத் தொகை வழங்கல்!
சனி 13, ஜூன் 2026 9:33:23 PM (IST)









