» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டிசிடபிள்யூ நிறுவனத்தின் சார்பில் விவசாயிகள் சங்கத்திற்கு புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு விழா!
வியாழன் 4, ஜூன் 2026 8:30:19 PM (IST)

ஆத்தூரில், டிசிடபிள்யூ நிறுவனத்தின் சார்பில் ரூ.21.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள விவசாயிகள் சங்கத்தின் புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் வட்டாரப் பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, டிசிடபிள்யூ நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதியிலிருந்து ரூ.21.50 லட்சம் செலவில் ஆத்தூர் குளம் கீழ்ப்பகுதி விவசாயிகள் சங்கத்திற்காக, புதிய அலுவலகக் கட்டடம் ஆத்தூர் பேருந்து நிலையம் அருகில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய கட்டடத்தின் திறப்பு விழா இன்று (ஜூன் 4) காலை நடைபெற்றது.விழாவில், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ முன்னிலையில், டிசிடபிள்யூ நிறுவனத்தின் மூத்த செயல் உதவித் தலைவர் ஜி. சீனிவாசன் புதிய அலுவலகக் கட்டடத்தைத் திறந்து வைத்தார்.

இவ்விழாவில், ஆத்தூர் கீழ்ப்பகுதி விவசாயிகள் சங்கத் தலைவர் செல்வம், செயலாளர் தட்சிணாமூர்த்தி, பொருளாளர் மாதவன், உபதலைவர் வாசிங்டன், உபசெயலாளர் வெள்ளைச்சாமி, மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற அண்ணன், தம்பி கைது!
சனி 13, ஜூன் 2026 12:06:32 PM (IST)

பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: வாலிபர் பலி; பெண் உட்பட 3 பேர் படுகாயம்
சனி 13, ஜூன் 2026 11:00:30 AM (IST)

புற்றுநோய் கொடுமையால் மனமுடைந்த பெண் தற்கொலை : தூத்துக்குடி அருகே சோகம்
சனி 13, ஜூன் 2026 10:48:52 AM (IST)

மாணவி கொலை வழக்கு: மரண தண்டனை பெற்ற குற்றவாளி மேல்முறையீடு செய்ய மீண்டும் அவகாசம்!
சனி 13, ஜூன் 2026 10:40:05 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்திற்கு என்எல்சி நிறுவனம் ரூ.3.65 கோடி சிஎஸ்ஆர் நிதி: 11 திட்டங்களுக்கு ஒப்புதல்!
சனி 13, ஜூன் 2026 8:52:16 AM (IST)

குடியிருப்புப் பகுதி டாஸ்மாக் கடையை பெண்கள் முற்றுகையிட்டுப் போராட்டம்: தூத்துக்குடியில் பரபரப்பு
சனி 13, ஜூன் 2026 8:42:12 AM (IST)









