» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புற்றுநோய் கொடுமையால் மனமுடைந்த பெண் தற்கொலை : தூத்துக்குடி அருகே சோகம்

சனி 13, ஜூன் 2026 10:48:52 AM (IST)

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் புற்றுநோய் பாதிப்பால் மனமுடைந்த பெண், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மனைவி லட்சுமி (54). இவர்களுக்கு அஜித் என்ற மகனும், மோனிஷா என்ற மருமகளும் உள்ளனர். லட்சுமி தன் மகன் மற்றும் மருமகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். லட்சுமிக்குக் கடந்த சில காலமாக கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்பு இருந்து வந்தது. இதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், நோய் வலியின் காரணமாகக் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். 

இந்நிலையில், நேற்று காலை 7 மணியளவில் லட்சுமியின் மருமகள் மோனிஷா எழுந்து பார்த்தபோது, லட்சுமியைக் காணவில்லை. வீட்டின் பல்வேறு இடங்களில் தேடியபோது, வீட்டின் பின்பக்கம் உள்ள ஓட்டுச் சாய்புக் கொட்டகையின் பனங்கட்டையில், லட்சுமி தனது சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. 

இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார், லட்சுமியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory