» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் எபோலா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை : ஆட்சியர் விஷு மகாஜன் ஆலோசனை!

வெள்ளி 29, மே 2026 9:04:43 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (29.05.2026), மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் எபோலா வைரஸ் நோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.

தற்போது மேலை நாடுகளில் பரவிவரும் எபோலா வைரஸ் நோய்த்தொற்று பரவுதலைத் தடுக்கும் பொருட்டு, தூத்துக்குடியில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எபோலா பாதிப்பு சந்தேகத்தின் பேரில் வருபவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க 06 படுக்கைகள் கொண்ட தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வரும் பயணிகளைத் தீவிர மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கும் கூட்டத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இக்கூட்டத்தில் மாவட்ட சுகாதார அலுவலர்கள் யாழினி (தூத்துக்குடி), வித்யா (கோவில்பட்டி), தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பொறுப்பு முதல்வர் பத்மநாபன், தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் அனுப், சுகாதாரத் துறையைச் சார்ந்த அனைத்து அலுவலர்கள், வ.உ.சி துறைமுக மருத்துவ அலுவலர் மற்றும் தூத்துக்குடி விமான நிலைய மருத்துவ அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்று ஆலோசனைகளை மேற்கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory