» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குடும்பத் தகராறில் விஷம் குடித்த வாலிபர் பலி!
புதன் 20, மே 2026 12:15:03 PM (IST)
தூத்துக்குடி அருகே மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாகப் பூச்சிக்கொல்லி மருந்து குடித்த வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள பேரிலோவன்பட்டி, மேலத்தெருவைச் சேர்ந்தவர் தனுஷ்கோடி மகன் முத்து வீர சின்னையா (39). இவரது மனைவி காயத்ரி. இந்நிலையில், முத்து வீர சின்னையா அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அவரது மனைவி காயத்ரி கண்டித்துள்ளார்.
இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனையடைந்த முத்து வீர சின்னையா, கடந்த மே 15-ஆம் தேதி விஷப் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை குடும்பத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் தராமல் இன்று காலை அவர் உயிரிழந்தார். இதுகுறித்து எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி சிவன் கோவிலில் மே 26-இல் குருபெயர்ச்சி விழா: பரிகாரப் பூஜைகள் நடைபெறுகிறது!
புதன் 20, மே 2026 12:31:50 PM (IST)

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ மீது டிஎஸ்பியிடம் புகார்!
புதன் 20, மே 2026 12:05:31 PM (IST)

சாலையை கடக்க முயன்ற போது வாகனம் மோதி விபத்து - மூதாட்டி உயிரிழப்பு!
புதன் 20, மே 2026 11:52:01 AM (IST)

தூத்துக்குடியில் மருந்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் - மாவட்டத்தில் 450 மருந்தகங்கள் மூடல்!
புதன் 20, மே 2026 11:36:50 AM (IST)

வேகத்தடையில் நிலைதடுமாறி கீழே விழுந்த வாலிபர் பலி - தூத்துக்குடியில் பரிதாபம்!
புதன் 20, மே 2026 11:16:29 AM (IST)

தூத்துக்குடியில் திருநங்கை தூக்கிட்டுத் தற்கொலை: போலீசார் விசாரணை
புதன் 20, மே 2026 11:07:01 AM (IST)










