» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் தொகுதியைத் தக்கவைத்துக் கொண்ட அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்..!
திங்கள் 4, மே 2026 8:36:09 PM (IST)

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், திமுக வேட்பாளர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று தனது தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதியில் மொத்தம் 22 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில், திமுக வேட்பாளர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் 72,723 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் நிலவரம்:
அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் திமுக 72,723 வெற்றி
ஜே. முருகன் தமிழக வெற்றிக் கழகம் 66,851
கேஆர்எம் ராதாகிருஷ்ணன் பாரதிய ஜனதா கட்சி 34,159
ஓபிலியா நாம் தமிழர் கட்சி9 794
திமுக வேட்பாளர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஜே. முருகனை விட 5,872 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றியை உறுதி செய்துள்ளார். இத்தொகுதியில் தவெக வேட்பாளர் ஜே. முருகன் இறுதி வரை கடும் போட்டியை வழங்கினார். பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் 34,159 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தார். மொத்தம் உள்ள 22 சுற்றுகளும் எண்ணி முடிக்கப்பட்டு தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களுக்காக தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம் : வாக்காளர்கள், நிர்வாகிகளுக்கு கீதாஜீவன் நன்றி!
செவ்வாய் 5, மே 2026 3:27:53 PM (IST)

தூத்துக்குடி எம்.எல்.ஏ ஸ்ரீநாத்திற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வாழ்த்து!
செவ்வாய் 5, மே 2026 3:19:02 PM (IST)

தேர்தல் வெற்றி: பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
செவ்வாய் 5, மே 2026 3:11:03 PM (IST)

பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: குற்றவாளி தர்ம முனீஸ்வரன் நீதிமன்றத்தில் ஆஜர்!
செவ்வாய் 5, மே 2026 10:50:08 AM (IST)

தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் உட்பட 13 பேர் டெபாசிட் இழப்பு!
செவ்வாய் 5, மே 2026 8:42:21 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக, தவெக சம பலம் : தலா 3 தொகுதிகளில் வெற்றி!
செவ்வாய் 5, மே 2026 8:27:40 AM (IST)









