» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் தொகுதியைத் தக்கவைத்துக் கொண்ட அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்..!

திங்கள் 4, மே 2026 8:36:09 PM (IST)



திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், திமுக வேட்பாளர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று தனது தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதியில் மொத்தம் 22 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில், திமுக வேட்பாளர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் 72,723 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் நிலவரம்:

அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் திமுக 72,723 வெற்றி 

ஜே. முருகன் தமிழக வெற்றிக் கழகம் 66,851 

கேஆர்எம் ராதாகிருஷ்ணன் பாரதிய ஜனதா கட்சி 34,159

ஓபிலியா நாம் தமிழர் கட்சி9 794 

திமுக வேட்பாளர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஜே. முருகனை விட 5,872 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றியை உறுதி செய்துள்ளார். இத்தொகுதியில் தவெக வேட்பாளர் ஜே. முருகன் இறுதி வரை கடும் போட்டியை வழங்கினார். பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் 34,159 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தார். மொத்தம் உள்ள 22 சுற்றுகளும் எண்ணி முடிக்கப்பட்டு தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital







Thoothukudi Business Directory