» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆட்டோ - பைக் மோதி விபத்து: வாலிபர் உயிரிழப்பு!
ஞாயிறு 3, மே 2026 10:07:11 AM (IST)
உடன்குடி அருகே ஆட்டோ மீது பைக் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் பறக்கை மதுசூதனபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் கணேஷ் (31), கூலித் தொழிலாளி ஆவார். இவர் நேற்று உடன்குடியில் இருந்து செட்டியாபத்து செல்லும் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லோடு ஆட்டோ மீது கணேஷின் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த மோதலில் தூக்கி வீசப்பட்ட கணேஷிற்குப் பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக உடன்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், பலனின்றி கணேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து குலசேகரன் பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களுக்காக தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம் : வாக்காளர்கள், நிர்வாகிகளுக்கு கீதாஜீவன் நன்றி!
செவ்வாய் 5, மே 2026 3:27:53 PM (IST)

தூத்துக்குடி எம்.எல்.ஏ ஸ்ரீநாத்திற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வாழ்த்து!
செவ்வாய் 5, மே 2026 3:19:02 PM (IST)

தேர்தல் வெற்றி: பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
செவ்வாய் 5, மே 2026 3:11:03 PM (IST)

பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: குற்றவாளி தர்ம முனீஸ்வரன் நீதிமன்றத்தில் ஆஜர்!
செவ்வாய் 5, மே 2026 10:50:08 AM (IST)

தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் உட்பட 13 பேர் டெபாசிட் இழப்பு!
செவ்வாய் 5, மே 2026 8:42:21 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக, தவெக சம பலம் : தலா 3 தொகுதிகளில் வெற்றி!
செவ்வாய் 5, மே 2026 8:27:40 AM (IST)









