» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஜேசிஐ ஹெர்குலேனியம் எலைட் சார்பில் நீர் மோர் விநியோகம்!

வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:42:12 PM (IST)



தூத்துக்குடியில், கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களைக் காக்கும் பொருட்டு, ஜேசிஐ ஹெர்குலேனியம் எலைட் அமைப்பின் சார்பில் நீர் மோர் பந்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

அமைப்பின் தலைவர் அருணாச்சலம் தலைமையில் நடைபெற்ற இந்தச் சமூகப்பணி நிகழ்வில், அந்த வழியாகச் சென்ற 400-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்குக் குளிர்ந்த நீர் மோர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியைச் செயலாளர் அலன், தீபக், வீர கண்ணன் மற்றும் ஹாட்லி ஆகியோர் முன்னின்று ஒருங்கிணைத்தனர். 

இதில் அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் உற்சாகமாக கலந்துகொண்டு பொதுமக்களுக்குச் சேவையாற்றினர். கடுமையான வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், ஜேசிஐ அமைப்பின் இந்த மனிதாபிமான முயற்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





Thoothukudi Business Directory