» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கார் - பிக்கப் வாகனம் மோதி விபத்து: இளைஞர் பலி!

சனி 11, ஏப்ரல் 2026 4:33:49 PM (IST)

ஆழ்வார்திருநகரி அருகே கார் - பிக்கப் வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், குருகாட்டூர் மேலத் தெருவைச் சேர்ந்த கேந்திரன் மகன் சுனில் தர்ஷன் (29). இவர் இன்று மதியம் தனது காரில் வந்து கொண்டிருந்தார். முத்துகிருஷ்ணாபுரம் அருகே அவர் காரைத் திருப்ப முயன்றபோது, திருநெல்வேலியிலிருந்து தென்திருப்பேரை நோக்கி வந்து கொண்டிருந்த பொலிரோ பிக்கப் வாகனம் எதிர்பாராத விதமாக மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சுனில் தர்ஷன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் பிக்கப் வாகனத்தை ஓட்டி வந்த தென்திருப்பேரை புதுத் தெருவைச் சேர்ந்த செல்வம் (52) என்பவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த இளைஞரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory