» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அனிதா ராதாகிருஷ்ணன் வாகனத்தை மறித்து பெண்கள் சரமாரி கேள்வி: பிரசாரத்தில் பரபரப்பு!

வியாழன் 9, ஏப்ரல் 2026 7:58:02 AM (IST)



திருச்செந்தூர் தொகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் வாகனத்தைப் பெண்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், நேற்று கோட்டூர் பகுதியில் பிரசாரம் செய்யச் சென்றபோது கடும் எதிர்ப்பைச் சந்தித்தார். 50-க்கும் மேற்பட்ட பெண்கள் அமைச்சரின் வாகனத்தைச் சூழ்ந்துகொண்டு, தொகுதிப் பிரச்சினைகள் குறித்துச் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர்.

அமைச்சர் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கங்களை ஏற்க மறுத்த மக்கள், அவருக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பியதால் அங்குப் பதற்றம் நிலவியது. மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, திட்டமிட்டபடி அந்தப் பகுதியில் பிரசாரம் செய்ய முடியாமல் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அங்கிருந்து உடனடியாகப் புறப்பட்டுச் சென்றார்.

ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு கள்விளை கிராமத்தில் அமைச்சரின் வாகனத்தை மக்கள் திருப்பி அனுப்பிய நிலையில், தற்போது கோட்டூர் பகுதியிலும் பெண்கள் முற்றுகையிட்ட சம்பவம் அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரசாரம் செல்லும் இடங்களில் தொடர்ச்சியாக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், திருச்செந்தூர் தொகுதித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory