» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நெல்லை, ராமேசுவரம் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:28:06 AM (IST)

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் தொடர் பராமரிப்புப் பணிகள் காரணமாக, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் முக்கிய விரைவு ரயில்களின் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

அதன்படி, நெல்லையிலிருந்து எழும்பூர் வரும் விரைவு ரயில் (வண்டி எண்: 12632) நாளை (ஏப்ரல் 6) முதல் வரும் 21-ஆம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். இதேபோல், ராமேசுவரத்திலிருந்து எழும்பூர் வரும் விரைவு ரயில் (வண்டி எண்: 16752) நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். ஐதராபாத்திலிருந்து வரும் சார்மினார் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12760) இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரிலிருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12661), வரும் 7-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை எழும்பூருக்குப் பதிலாகத் தாம்பரத்திலிருந்து இரவு 8:05 மணிக்குப் புறப்படும். சென்னை - ராமேசுவரம் விரைவு ரயில் (வண்டி எண்: 16751), வரும் 7-ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரத்திலிருந்து இரவு 9:05 மணிக்குப் புறப்படும். மேலும், தாம்பரத்திலிருந்து ஐதராபாத் செல்லும் விரைவு ரயில் (வண்டி எண்: 12759) நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை, சென்னை கடற்கரையிலிருந்து மாலை 6:20 மணிக்குப் புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory