» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 460 புதிய சிசிடிவி கேமராக்கள்: எஸ்பி மதன் தொடங்கி வைத்தார்
வெள்ளி 3, ஏப்ரல் 2026 4:34:21 PM (IST)

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நிறுவப்பட்டுள்ள 460 புதிய சிசிடிவி கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் தொடங்கி வைத்தார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், பாதுகாப்புப் பணிகளை பலப்படுத்தவும் 460 புதிய சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. திருச்செந்தூரில் இவற்றைத் தொடக்கி வைத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், 100 சதவீத வாக்குப்பதிவு குறித்துப் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தேர்தல் நேரத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு, மாவட்டம் முழுவதும் சிசிடிவி கேமராக்களை நிறுவுமாறு உட்கோட்டக் காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப. உத்தரவிட்டிருந்தார். அதன்படி, பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரின் கூட்டு முயற்சியால் மாவட்டம் முழுவதும் மொத்தம் 460 புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
உட்கோட்ட வாரியாகப் பொருத்தப்பட்ட கேமராக்களின் விவரம்:
தூத்துக்குடி நகரம்: 58
தூத்துக்குடி ஊரகம்: 114
திருச்செந்தூர்: 52
சாத்தான்குளம்: 29
ஸ்ரீவைகுண்டம்: 59
மணியாச்சி: 24
கோவில்பட்டி: 73
விளாத்திகுளம்: 51
திருச்செந்தூரில் தொடக்க விழா
திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேரிகுடியிருப்பு பகுதியில் புதிதாக நிறுவப்பட்ட சிசிடிவி கேமராக்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இன்று தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து, அப்பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த அவர், "நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்; 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும்" என வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
காவல்துறையினருக்கு உத்தரவு
சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் நேரடியாகச் சென்று ஆய்வு நடத்த வேண்டும் என எஸ்பி உத்தரவிட்டுள்ளார். மேலும், அந்தந்தப் பகுதி பொதுமக்களிடம் தேர்தலின் முக்கியத்துவம் குறித்துத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிகழ்வில் திருச்செந்தூர் உட்கோட்டக் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார், காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், தேரிகுடியிருப்பு ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொலை வழக்கில் தொடர்புடைய நபர் குண்டர் சட்டத்தில் கைது!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 8:29:36 PM (IST)

முதல்வர் மு.க. ஸ்டாலின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை: தூத்துக்குடியில் பரபரப்பு
வெள்ளி 3, ஏப்ரல் 2026 8:22:40 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.60.98 லட்சம் ரொக்கம்; ரூ.4 லட்சம் மதுபானங்கள் பறிமுதல்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 5:48:15 PM (IST)

இது விசுவாசத்திற்கும் துரோகத்திற்குமான தேர்தல்: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆவேசப் பேச்சு!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 5:36:02 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஊர்வசி அமிர்தராஜ் மீண்டும் போட்டி : காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 4:46:00 PM (IST)

கோவில்பட்டி பள்ளியில் மாணவர்களுக்கான மேற்படிப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி
வெள்ளி 3, ஏப்ரல் 2026 3:22:26 PM (IST)







