» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் இரவு நேர விமான சேவை தொடக்கம் : பயணிகள் உற்சாகம்!

திங்கள் 30, மார்ச் 2026 8:36:45 AM (IST)



தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் சுமார் ரூ.452 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட நவீனமயமாக்கல் பணிகளுக்குப் பிறகு, நேற்று முதல் இரவு நேர விமான போக்குவரத்து சேவை வெற்றிகரமாகத் தொடங்கியது.

கடந்த ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட புதிய முனையத்தில், இரவு நேரங்களில் விமானங்கள் தரையிறங்குவதற்கும், புறப்படுவதற்கும் தேவையான சிக்னல் மற்றும் ஓடுதள விளக்கு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தற்போது அந்த வசதிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

சென்னையிலிருந்து மாலை 6:15 மணிக்குப் புறப்பட்ட விமானம், இரவு 7:55 மணிக்கு தூத்துக்குடி வந்தடைந்தது. மீண்டும் தூத்துக்குடியிலிருந்து இரவு 8:15 மணிக்குப் புறப்பட்டு, இரவு 9:45 மணிக்குச் சென்னையைச் சென்றடைந்தது. 

முதல் இரவு நேர சேவையில் பயணம் செய்ய வந்த பயணிகளை விமான நிலைய இயக்குநர் மற்றும் ஊழியர்கள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். இந்தச் சாதனையைத் துரிதப்படுத்தும் விதமாகப் பயணிகளுடன் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் இரவு நேர விமான சேவையைத் தொடங்கி வைக்கும் நிகழ்வில் விமான நிலைய மற்றும் இண்டிகோ நிறுவன அதிகாரிகள் கலந்துகொண்டனர். தூத்துக்குடி விமான நிலைய மேலாளர் மோனிகா தலைமையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஏடிசி பிரிவு தலைவர் ராஜலட்சுமி முன்னிலையில் விமானங்களின் பாதுகாப்பான தரையிறக்கம் மற்றும் புறப்பாடு உறுதி செய்யப்பட்டது. இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் விற்பனைப் பிரிவு மேலாளர் சந்திரசேகர் மற்றும் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் மைக்கேல் ஆகியோர் பயணிகளுக்கான சேவைகளை ஒருங்கிணைத்தனர்.

https://media.tutyonline.net/assets/2026_Part_01/airporti44i.jpg

முதல் நாளிலேயே இந்தச் சேவைக்கு அபார வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னை மற்றும் தூத்துக்குடியிலிருந்து தலா 78 பயணிகள் (அனைத்து இருக்கைகளும் நிரப்பப்பட்டு) பயணம் மேற்கொண்டனர். இந்தச் சேவை வணிகர்கள் மற்றும் அவசரத் தேவைகளுக்காகப் பயணிப்போருக்குப் பெரும் உதவியாக இருக்கும் எனப் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தற்போது தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு 4 விமானங்கள், பெங்களூருக்கு  1 விமானம் என மொத்தம் 5 தினசரி சேவைகள் தனியார் நிறுவனங்கள் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன.


மக்கள் கருத்து

தூத்துக்குடிக்காரன்Mar 31, 2026 - 03:01:46 PM | Posted IP 162.1*****

மிக மிக சிறப்பு. இதுபோலவே தூத்துக்குடிக்கு தேவையான ரயில் சேவைகள் 1. தூத்துக்குடி - சென்னை இரண்டாவது இரவு நேர தினசரி ரயில் தேவை 2. தூத்துக்குடி - மதுரை காலை நேர தினசரி ரயில் (காலையில் 10மணிக்கு தூத்துக்குடியில் புறப்பட்டு மதுரைக்கு மதியம் 1மணிக்குச்சென்று பின்னர் மதுரையில் பிற்பகல் 3மணிக்கு புறப்பட்டு மலை 6 மணிக்கு தூத்துக்குடிக்கு வந்தடையும் வகையில்) தேவை. 3. தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் (16765/16766) வாரம் இருமுறை செல்கிறது. அதை குறைந்தபட்சம் வாரம் 3 முறையாக நீட்டிக்கவேண்டும். இந்த மூன்றும் தூத்துக்குடி மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமாகும்.

ஒருவன்Mar 30, 2026 - 10:49:42 AM | Posted IP 104.2*****

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory