» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளருக்குக் கொலை மிரட்டல் - ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு

ஞாயிறு 29, மார்ச் 2026 9:05:12 AM (IST)

தூத்துக்குடி அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணி ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட தகராறில், கிளை மேலாளரை மிரட்டியதாக தற்காலிக ஓட்டுநர் மீது வடபாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி கோரம்பள்ளத்தைச் சேர்ந்தவர் ஹரிராம் (31). இவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவருக்குத் தினமும் தேவைக்கேற்ப வெவ்வேறு வழித்தடங்களில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

தனக்குத் தொடர்ந்து ஒரே வழித்தடத்தில் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, கிளை மேலாளர் முருகேசனை (52) ஹரிராம் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஹரிராம், கிளை மேலாளர் முருகேசனுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட கிளை மேலாளர் முருகேசன் இது குறித்துத் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், ஓட்டுநர் ஹரிராம் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory