» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கடற்கரையில் கஞ்சா விற்பனை: 4 பேர் கைது – 1 கிலோ கஞ்சா பறிமுதல்!

சனி 4, ஏப்ரல் 2026 8:06:41 PM (IST)

மணப்பாடு கடற்கரை பகுதியில் விற்பனைக்காகக் கஞ்சா வைத்திருந்த 4 வாலிபர்களைப் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுக்கப் போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, நேற்று குலசேகரன்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் பிரபு பாஸ்கரன், உதவி ஆய்வாளர் முத்து மற்றும் போலீசார் நேற்று மணப்பாடு கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் குலசேகரன்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர்களான சின்னதுரை (27), அபிஷேக் (20), திசையன்விளை பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன் (24) மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த மாயகிருஷ்ணன்  (24) ஆகியோர் என்பதும், அவர்கள்  விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்துக் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory