» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் காரில் கொண்டு வந்த ரூ.13.30 லட்சம் பறிமுதல்: : தேர்தல் பறக்கும் படை அதிரடி!

வெள்ளி 20, மார்ச் 2026 7:59:00 PM (IST)



தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில், உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூ.13 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ஓட்டப்பிடாரம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காமாட்சி தலைமையிலான பறக்கும் படையினர், தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள சுசி பெட்ரோல் நிலையம் அருகே நேற்று தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்தச் சோதனையில், காரில் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி ரூ.13,30,000 ரொக்கப் பணம் கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், தூத்துக்குடி தலைமையிடத்துத் துணை வட்டாட்சியர் பாலமுருகனிடம் ஒப்படைத்தனர். இந்தச் சோதனையின் போது காவல் உதவி ஆய்வாளர் லதா மற்றும் காவல்துறை ஊழியர்கள் உடனிருந்தனர்.

தேர்தல் விதிமுறைகளின்படி, பறிமுதல் செய்யப்பட்ட இந்தப் பணத்திற்கான உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் பட்சத்தில், விசாரணைக்குப் பின் பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital







Thoothukudi Business Directory