» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாணவி கொலை வழக்கு: குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆர்ப்பாட்டம்!
சனி 14, மார்ச் 2026 4:10:03 PM (IST)

வேடநத்தம் மாணவி கொலை வழக்கில், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, கடந்த புதன்கிழமை வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் நடந்து மூன்று நாட்களாகியும், இதுவரை குற்றவாளிகளைக் காவல்துறையினர் கைது செய்யவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.
இதனைக் கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக மாவட்ட தலைவர் சரவண கிருஷ்ணன், மாவட்ட பொதுச்செயலாளர் வேல்ராஜா, மாநில செயலாளர் போத்தீஸ் ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் காட்டு ராஜா, சுயம்பு, சரவணன் சிவபெருமாள் பாஜக நிர்வாகிகள் கந்தசாமி, பெஞ்சமின் பாண்டியன்,லீலாவதி, புகழ்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பத்திரிகையாளர் ஓய்வூதியம் உயர்வு: அமைச்சர் கீதா ஜீவனிடம் தூத்துக்குடி செய்தியாளர்கள் நன்றி!
சனி 14, மார்ச் 2026 9:13:30 PM (IST)

தூத்துக்குடி விமான நிலையப் பெயர் மாற்றம் : மத்திய அரசு ஒப்புதல்!
சனி 14, மார்ச் 2026 9:07:47 PM (IST)

மக்காச்சோள விலை வீழ்ச்சி: கனிமொழி எம்.பியிடம் விவசாயிகள் முறையீடு - உரிய நடவடிக்கை எடுக்க உறுதி!
சனி 14, மார்ச் 2026 8:20:23 PM (IST)

காசோலை பரிவர்த்தனையில் கூடுதல் பாதுகாப்பு: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி புதிய அறிவிப்பு
சனி 14, மார்ச் 2026 5:47:47 PM (IST)

தூத்துக்குடி - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் : மத்திய அமைச்சரிடம் பயணிகள் நலச் சங்கம் மனு!
சனி 14, மார்ச் 2026 5:00:10 PM (IST)

மாணவி கொலை: சிபிஐ விசாரணை கோரி குடியரசுத் தலைவருக்கு வழக்கறிஞர் கடிதம்!
சனி 14, மார்ச் 2026 4:35:26 PM (IST)







