» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாணவி கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்: முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் கோரிக்கை!

சனி 14, மார்ச் 2026 8:28:29 AM (IST)

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தத்தில் பிளஸ்-2 மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று அதிமுக மாநில வர்த்தகரணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாகத் தூத்துக்குடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் சீராக இருந்தது. ஆனால், 2021-இல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாக மாறி வருகிறது. கஞ்சா புழக்கம் மற்றும் மது போதையால் தொடர் கொலைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதால் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

வேடநத்தத்தில் மாணவி காணாமல் போனபோது, அவரது பெற்றோர் அளித்த புகாரின் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. புகார் அளிக்கச் சென்ற பெற்றோரைத் தரக்குறைவாகப் பேசி அலைக்கழித்துள்ளனர். சம்பவம் நடந்து 3 நாட்களாகியும் குற்றவாளிகளைக் கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இந்த அலட்சியத்திற்குத் தமிழக முதல்வரே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்குத் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இச்சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் யாரென்பதைக் கண்டறிந்து அவர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். அதற்கு இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறிய தமிழக முதல்வர் தனது பதவி விலக வேண்டும்.

பேட்டியின் போது அதிமுக தெற்கு மாவட்டத் துணைச் செயலாளர் சந்தனம், தெற்கு மாவட்ட வர்த்தகரணிச் செயலாளர் துரைசிங், வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜகோபால் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

srinivasanMar 14, 2026 - 10:20:08 AM | Posted IP 172.7*****

for this crime the two reasons are there one Drug kanja another is cellphone with sex video. these are very avilable things for the crime

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital



Thoothukudi Business Directory