» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மின்சாரம் தாக்கி 3 பசு மாடுகள் உயிரிழப்பு!
வியாழன் 12, மார்ச் 2026 7:58:22 AM (IST)

திருச்செந்தூர் அருகே மின்கசிவு காரணமாக மின்மாற்றிக்கு அருகில் மேய்ந்து கொண்டிருந்த மூன்று பசு மாடுகள் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் காலை 11 மணி வரை பரவலாக மழை பெய்தது. மழையின் காரணமாகத் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதுடன், மின்சாரக் கட்டமைப்புகளிலும் ஈரப்பதம் காணப்பட்டது.
திருச்செந்தூர் அருகே உள்ள கீழநாலுமூலைக்கிணறு பகுதியைச் சேர்ந்த ராஜ் மற்றும் முருகேசன் ஆகியோருக்குச் சொந்தமான பசு மாடுகள் நேற்று வழக்கம்போல மேய்ச்சலுக்குச் சென்றன. அப்போது, சாலையோரத்தில் இருந்த மின்மாற்றியில் எதிர்பாராதவிதமாக மின்கசிவு ஏற்பட்டிருந்தது.
அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த மூன்று பசு மாடுகள் மின்மாற்றிக்கு அருகில் சென்றபோது, அவற்றின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட மூன்று மாடுகளும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தன.
இது குறித்துத் தகவல் அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக அப்பகுதிக்கு வந்து மின் இணைப்பைத் துண்டித்தனர். பின்னர் உயிரிழந்த மாடுகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. இச்சம்பவம் குறித்துத் திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வளர்ப்பு மாடுகள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, உயிரிழந்த பசு மாடுகளே தங்களது வாழ்வாதாரமாக இருந்ததாகக் கூறி, பாதிக்கப்பட்ட ராஜ் மற்றும் முருகேசன் வேதனை தெரிவித்துள்ளனர். "மழையினால் ஏற்பட்ட மின்கசிவை முறையாகக் கவனிக்காததே இந்த விபத்திற்குக் காரணம். எனவே, மின்வாரியம் மற்றும் அரசு சார்பில் எங்களுக்கு உரிய நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்," என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கள்ளச்சாராயம் குடித்து செத்தவனுக்கு 10 லட்சம்: இதுதான் திராவிட மாடல் வளர்ச்சியா? சீமான் ஆவேசம்!
சனி 11, ஏப்ரல் 2026 12:00:57 PM (IST)

தூத்துக்குடி அனல் மின் நிலைய ஊழியர் திடீர் மாயம்: போலீசார் விசாரணை
சனி 11, ஏப்ரல் 2026 11:24:20 AM (IST)

பேனர்கள், பணப் பரிமாற்றம்: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பார்வையாளர்கள் விளக்கம்!
சனி 11, ஏப்ரல் 2026 10:55:59 AM (IST)

மிளகாய் பறிக்கச் சென்ற மூதாட்டி உயிரிழப்பு : வெயில் கொடுமையால் சோகம்!!
சனி 11, ஏப்ரல் 2026 10:42:08 AM (IST)

தூத்துக்குடி - மதுரை நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல் : குடிநீர் பிரச்சனையால் ஆவேசம்
சனி 11, ஏப்ரல் 2026 10:32:55 AM (IST)

அதிகாரியின் அவதூறு பேச்சு: சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவிப்பு!
சனி 11, ஏப்ரல் 2026 10:25:05 AM (IST)







