» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலை தீ விபத்து: உயிரிழந்த 3 பேர் குடும்பத்தினருக்கு ரூ.12 லட்சம் நிவாரண நிதி வழங்கல்

புதன் 11, மார்ச் 2026 8:18:58 AM (IST)

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த மூன்று தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 லட்சம் வீதம் மொத்தம் ரூ.12 லட்சத்திற்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தீப்பெட்டி ஆலை கிடங்கில், கடந்த மார்ச் 2-ஆம் தேதி எதிர்பாராதவிதமாகத் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி கோவில்பட்டி விஜயாபுரி கீழத்தெருவைச் சேர்ந்த கார்த்திக் (27), கேரள மாநிலத்தைச் சேர்ந்த கணேசன் (47) மற்றும் சிவகாசி அருகே பேரநாயக்கன்பட்டியைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் சுடலைமுத்து (42) ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த தமிழக முதல்வர், அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி, கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சார் ஆட்சியர் ஹீமான்சு மங்கள் கலந்துகொண்டு உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களிடம் நிவாரண நிதிக்கான காசோலைகளை வழங்கினார்.

கார்த்திக்கின் தந்தை சமுத்திரம், சுடலைமுத்துவின் மனைவி விஜயலட்சுமி, கணேசனின் மனைவி ஷீலா ஆகியோர் இந்த நிவாரணத் தொகையைப் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வின் போது வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory