» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது

புதன் 11, மார்ச் 2026 8:14:36 AM (IST)

ஆறுமுகனேரி அருகே சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி பேயன்விளை பகுதியில், சிறுவர்களைக் குறிவைத்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், சிறப்பு உதவி ஆய்வாளர் தாமோதரன் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஆலந்தலை சுனாமி நகரைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் மணிகண்டன் (21) என்பது தெரியவந்தது. மேலும், அவர் அப்பகுதியில் உள்ள சிறுவர்களுக்குப் போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்ததும் உறுதி செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட மணிகண்டனைச் சோதனை செய்ததில், அவர் வைத்திருந்த பையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 150 கிராம் கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை அடைக்கப் பயன்படும் 10 'ஜிப் லாக்' கவர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் அவற்றை பறிமுதல் செய்து, மணிகண்டனை சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory