» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு கல்லூரிக்கு செல்ல கூடுதல் பேருந்து வசதி : மாணவிகள் கோரிக்கை!

திங்கள் 9, மார்ச் 2026 4:13:41 PM (IST)

சாத்தான்குளம் அரசு கல்லூரிக்கு செல்ல கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என்று மாணவிகள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், பெரியதாழையிலிருந்து சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்குச் செல்ல கூடுதல் பேருந்து வசதி செய்து தரக்கோரி, அக்கிராமத்தைச் சேர்ந்த மாணவிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், பெரியதாழை கிராமத்தைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட மாணவிகள் சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று வருகின்றனர். இம்மாணவிகள் கல்லூரிக்குச் செல்ல முறையான பேருந்து வசதி இல்லாததால் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். 

இதனால் சரியான நேரத்திற்கு கல்லூரிக்குச் செல்ல இயலாத நிலை நிலவுகிறது. தற்போது திருச்செந்தூரிலிருந்து படுக்கப்பத்து வழியாகச் செல்லும் 62B என்ற தடம் எண் கொண்ட அரசுப் பேருந்தை, காலை 7:30 மணி அளவில் பெரியதாழை கிராமத்திற்குள் வந்து மாணவிகளை ஏற்றிச் செல்லுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital



Thoothukudi Business Directory