» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் உலக மகளிர் தின விழா: அமைச்சர் கீதா ஜீவன் விருது வழங்கினார்

திங்கள் 9, மார்ச் 2026 11:01:23 AM (IST)



தூத்துக்குடியில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் விருதுகளை வழங்கினார். 

தூத்துக்குடியில் தாய்மை உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தின விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.இவ்விழாவிற்கு அறக்கட்டளை நிறுவனர் பி. ராஜம் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் எம்.எஸ். ரூபா வரவேற்புரையாற்றினார். பிரபல நகைச்சுவை நடிகர் கிங்காங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். 

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் நிகழ்வில் பங்கேற்று, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகளை வழங்கினார். மருத்துவம், கல்வி, கலை மற்றும் சமூக சேவைத் துறைகளில் சிறந்து விளங்கிய முனைவர் எம்.எஸ். ரூபா, பல் மருத்துவர் ஐஸ்வர்யா, டாக்டர் ராஜலட்சுமி, வழக்கறிஞர் விஜயலட்சுமி, தொழிலதிபர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், பாடகி விஸ்வரூபினி மற்றும் பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோருக்கு அமைச்சர் விருதுகளை வழங்கினார்.

இவ்விழாவில் மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள் மற்றும் நலிவடைந்தோருக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், முனைவர் சகா.மா. சங்கர் கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பங்கேற்பாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital



Thoothukudi Business Directory