» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரிஷியன் பலி: போலீஸ் விசாரணை!
திங்கள் 2, மார்ச் 2026 10:55:05 AM (IST)
தூத்துக்குடியில் மின் கம்பத்தில் ஏறி, மின் தடையைச் சரி செய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கி எலக்ட்ரிஷியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி அண்ணா நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் சாமுவேல் (25). எலக்ட்ரிஷியனாக வேலை செய்து வந்த இவரது வீட்டில், நேற்று இரவு திடீரென மின் தடை ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை சுமார் ஒரு மணி அளவில், தனது வீட்டின் முன்னே உள்ள மின் கம்பத்தில் பழுது ஏற்பட்டிருக்கலாம் என எண்ணிய சாமுவேல், அதனைச் சரி செய்ய மின் கம்பத்தில் ஏறியுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில், நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன், விரைந்து வந்து உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
தூத்துக்குடி அண்ணா நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் சாமுவேல் (25). எலக்ட்ரிஷியனாக வேலை செய்து வந்த இவரது வீட்டில், நேற்று இரவு திடீரென மின் தடை ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை சுமார் ஒரு மணி அளவில், தனது வீட்டின் முன்னே உள்ள மின் கம்பத்தில் பழுது ஏற்பட்டிருக்கலாம் என எண்ணிய சாமுவேல், அதனைச் சரி செய்ய மின் கம்பத்தில் ஏறியுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில், நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன், விரைந்து வந்து உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொலை முயற்சி, கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய இருவர் குண்டர் சட்டத்தில் கைது
திங்கள் 2, மார்ச் 2026 8:23:14 PM (IST)

தாய்மைப் பருவத்தை தள்ளிப்போடாதீர்கள்: அமைச்சர் பி. கீதா ஜீவன் அறிவுரை!
திங்கள் 2, மார்ச் 2026 5:47:32 PM (IST)

நடமாடும் உழவர் சந்தை வாகனங்கள் : ஆட்சியர் க. இளம்பகவத் துவக்கி வைத்தார்!
திங்கள் 2, மார்ச் 2026 4:09:10 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம் கோலாகலம்
திங்கள் 2, மார்ச் 2026 3:37:15 PM (IST)

வெள்ள நிவாரண நிதியை விடுவிக்க வேண்டும்: பெருங்குளம் பேரூராட்சித் தலைவர் கோரிக்கை!
திங்கள் 2, மார்ச் 2026 3:26:04 PM (IST)

தூத்துக்குடி தொகுதியை இரண்டாகப் பிரிக்க வேண்டும் : பரதர் குல அரசியல் உரிமை மீட்பு மாநாட்டில் தீர்மானம்
திங்கள் 2, மார்ச் 2026 3:13:50 PM (IST)










