» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரிஷியன் பலி: போலீஸ் விசாரணை!

திங்கள் 2, மார்ச் 2026 10:55:05 AM (IST)

தூத்துக்குடியில் மின் கம்பத்தில் ஏறி, மின் தடையைச் சரி செய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கி எலக்ட்ரிஷியன் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி அண்ணா நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் சாமுவேல் (25). எலக்ட்ரிஷியனாக வேலை செய்து வந்த இவரது வீட்டில், நேற்று இரவு திடீரென மின் தடை ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை சுமார் ஒரு மணி அளவில், தனது வீட்டின் முன்னே உள்ள மின் கம்பத்தில் பழுது ஏற்பட்டிருக்கலாம் என எண்ணிய சாமுவேல், அதனைச் சரி செய்ய மின் கம்பத்தில் ஏறியுள்ளார். 

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில், நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன், விரைந்து வந்து உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory