» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கடற்கரையில் மீன்கள் செத்து ஒதுங்கியதால் பரபரப்பு
திங்கள் 2, மார்ச் 2026 8:39:14 AM (IST)
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் கடற்கரையில் அதிக அளவில் மீன்கள் செத்து ஒதுங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடிக்கு அருகிலுள்ள ஒரு மீனவ கிராமம் தருவைகுளம் ஆகும். இப்பகுதிக்கும் வெள்ளப்பட்டிக்கும் இடையே உப்பாற்று ஓடை அமைந்துள்ளது. மழைக்காலங்களில் காட்டாற்று வெள்ளம் இந்த ஓடை வழியாக வந்து தருவைகுளம் அருகே கடலில் கலப்பது வழக்கம். இந்த ஓடையின் குறுக்கே தற்போது புதிய மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
நேற்று, இந்த உப்பாற்று ஓடை கடலில் கலக்கும் பகுதியில் திடீரென மீன்கள் செத்து கரை ஒதுங்கிக் கிடந்தன. இதில் சுமார் அரை கிலோ எடையுள்ள மீன்கள் அதிக அளவில் இறந்த நிலையில் காணப்பட்டன. தகவல் அறிந்த அப்பகுதி மீனவர்களும் பொதுமக்களும் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர்.
உப்பாற்று ஓடை நீர் கடலில் கலக்கும் இடத்தில் மீன்கள் செத்து ஒதுங்கியுள்ளதால், அந்தத் தண்ணீரில் ஏதேனும் நச்சுக் கழிவுகள் கலந்திருக்க வாய்ப்பிருக்கலாம் என மீனவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தருவைகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொலை முயற்சி, கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய இருவர் குண்டர் சட்டத்தில் கைது
திங்கள் 2, மார்ச் 2026 8:23:14 PM (IST)

தாய்மைப் பருவத்தை தள்ளிப்போடாதீர்கள்: அமைச்சர் பி. கீதா ஜீவன் அறிவுரை!
திங்கள் 2, மார்ச் 2026 5:47:32 PM (IST)

நடமாடும் உழவர் சந்தை வாகனங்கள் : ஆட்சியர் க. இளம்பகவத் துவக்கி வைத்தார்!
திங்கள் 2, மார்ச் 2026 4:09:10 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம் கோலாகலம்
திங்கள் 2, மார்ச் 2026 3:37:15 PM (IST)

வெள்ள நிவாரண நிதியை விடுவிக்க வேண்டும்: பெருங்குளம் பேரூராட்சித் தலைவர் கோரிக்கை!
திங்கள் 2, மார்ச் 2026 3:26:04 PM (IST)

தூத்துக்குடி தொகுதியை இரண்டாகப் பிரிக்க வேண்டும் : பரதர் குல அரசியல் உரிமை மீட்பு மாநாட்டில் தீர்மானம்
திங்கள் 2, மார்ச் 2026 3:13:50 PM (IST)











ஓட்டு போட்ட முட்டாள்Mar 2, 2026 - 09:09:27 AM | Posted IP 162.1*****