» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!
வியாழன் 26, பிப்ரவரி 2026 9:16:08 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்கள், தமிழக அரசின் தடுப்புக் காவல் சட்டத்தின் (குண்டர் சட்டம்) கீழ் இன்று கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சீனி முகம்மது நியாஸ் (19) மற்றும் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சந்தோஷ்குமார் (19) ஆகிய இருவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்கள் பரிந்துரைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சித் தலைவர் மேற்படி இருவரையும் தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் (1982) கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் இன்று (26.02.2026) இருவரையும் முறைப்படி கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். போதைப்பொருள் விற்பனை மூலம் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவர்கள் மீது இத்தகைய கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி 1-வது ரயில்வே கேட் திடீர் மூடல் - பொதுமக்கள் கடும் அவதி
வியாழன் 26, பிப்ரவரி 2026 8:53:55 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தை பார்வையிட்ட லசால் பள்ளி மாணவர்கள்!
வியாழன் 26, பிப்ரவரி 2026 8:40:27 PM (IST)

தூத்துக்குடியில் தூய்மைப் பணியாளர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் முற்றுகைப் போராட்டம்!
வியாழன் 26, பிப்ரவரி 2026 5:44:05 PM (IST)

பள்ளி மாணவியைப் பிரம்பால் தாக்கிய ஆசிரியை கைது : தூத்துக்குடியில் பரபரப்பு
வியாழன் 26, பிப்ரவரி 2026 4:15:39 PM (IST)

டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள்: தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு
வியாழன் 26, பிப்ரவரி 2026 4:03:35 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் : ரூ.298.77 லட்சம் உபரி நிதி - அதிமுக வெளிநடப்பு
வியாழன் 26, பிப்ரவரி 2026 3:34:10 PM (IST)










